News October 30, 2025

நெல்லை மாநகரில் ஒருவர் குண்டாசில் கைது

image

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை (43). இவர் பண பிரச்சனை காரணமாக பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தி வந்தார். இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவையடுத்து வானமாமலை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News October 30, 2025

நெல்லை: லஞ்சம் பெற்ற 2 அதிகாரிகளுக்கு சிறை

image

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கோமதிநாயகம் 2009ல் வீடு கட்டி மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தார். உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வணிக உதவியாளர் உதயகுமார் ரூ.7500 லஞ்சம் கேட்டனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுப்பையா இருவருக்கும் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

News October 29, 2025

நெல்லை மாணவியை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

image

பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற நெல்லையை சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும் சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள எட்வினா ஜேசனைபாராட்டி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார்.

News October 29, 2025

நெல்லை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!