News October 30, 2025
டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
துரோகத்திற்கு EPS-க்கு நோபல் பரிசு தரலாம்: KAS

துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்காக கிடைத்த பரிசு தான், கட்சியில் இருந்து நீக்கம் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், துரோகம் செய்வதில் இபிஎஸ்-க்கு நோபல் பரிசு தரலாம் என்றும் கடுமையாக சாடினார்.
News November 1, 2025
BREAKING: கண்ணீர் விட்ட செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். MGR, ஜெயலலிதா என அனைத்து தலைவர்களிடமும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
News November 1, 2025
திமுகவின் B டீமா? செங்கோட்டையன் விளக்கம்

திமுகவின் ‘B’ டீமாக தான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருப்பதாக செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக இருந்த தன்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனையளிப்பதாக கூறினார். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.


