News October 30, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (29.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

திருப்பத்தூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News November 1, 2025

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

திருப்பத்தூர்: ரயில் பயணிகளை குறிவைத்து திருடும் கும்பல்

image

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையிடம் சில நாட்களுக்கு முன்பு ரயில் படியில் பயணம் செய்த வாலிபரை குச்சியால் அடித்து செல்போன் திருடியது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நேற்று (அக்-31) ஆம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை செய்ததில், கந்திகொள்ளை பகுதியை சேர்ந்த பரமேஷ் (20) எனும் வாலிபர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!