News October 29, 2025

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட பல்வேறு விபரம் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

image

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் வர்த்தக தள்ளுபடிகளை நம்பி ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் சில சமயங்களில் மோசடியின் அறிகுறியாக இருக்கலாம். தவறான விளம்பரங்களில் சிக்காமல் இருக்கும் வழிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு, சந்தேகங்கள் ஏற்பட்டால் இலவச தொலைபேசி 1930 இல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

News October 30, 2025

ஈரோடு: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

image

ஈரோடு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

ஈரோடு: இருசக்கர புதிய வாகனம் வாங்க ரூ.10,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!