News October 29, 2025
RAIN ALERT: 14 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, குமரி, தென்காசி, தேனி, நெல்லை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாய் இருங்கள்!
Similar News
News November 1, 2025
உங்களுக்கு இப்படி போன் வருதா.. மாட்டிக்காதீங்க!

4G சிம்-ஐ 5G e-SIM-ஆக அப்டேட் செய்ய சொல்லி Call வந்தால், கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மோசடி அழைப்பாக இருக்கலாம். மும்பையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு இப்படி போன் கால் செய்து, அவரின் அக்கவுண்டில் இருந்த ₹11 லட்சத்தை ஒரு கும்பல் அபேஸ் செய்துள்ளது. சிம் கார்டு முடக்கப்பட்டு விடும் என ஏமாற்றி, OTP-யை பெற்று பணத்தை திருடியுள்ளனர். உங்களுக்கும் இப்படியான அழைப்புகள் வரலாம். யாருடனும் OTP-யை பகிராதீங்க!
News November 1, 2025
டி20-யில் அதிக சிக்ஸர்கள் அடுத்தது யார்?

டி20 கிரிக்கெட்டின் அழகே அதன் அதிரடியில்தான் உள்ளது. பந்துவீச்சாளர் எவ்வளவு வேகமாகவும், சாமர்த்தியமாகவும் பந்துவீசினாலும், அதை பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு விரட்டுவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். கண்களை கவரும் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: CM

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இன்றைய நாளை, எல்லை போராட்ட தியாகிகள் நாள் என்று கூறி, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளை போராடி பெற்றுத்தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நம் தலைவர்கள் வழியில் உரிமைகளை காப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.


