News October 29, 2025
நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Similar News
News October 30, 2025
நாகை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

நாகை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News October 30, 2025
நாகை: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

காஞ்சிபுரத்தை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் நாகை அரசு மருத்துவ கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். நிஷாந்த் செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான், 3–ம் ஆண்டு செல்ல முடியும் என்கிற நிலையில் இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிஷாந்த் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News October 30, 2025
நாகை மக்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாக கலந்து, கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


