News October 29, 2025

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா ஆஜர்

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக ED-யும் விசாரணையை தொடங்கியது. இதில், இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணா இன்று ஆஜரான நிலையில், அவரிடம் ED விசாரணை நடத்தி வருகிறது.

Similar News

News October 30, 2025

விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.

News October 30, 2025

விஜய்யை நெப்போலியன் எதிர்ப்பதற்கு காரணம் இதுவா?

image

‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில், விஜய்யை சந்திக்கச் சென்றுள்ளார் நெப்போலியன். அப்போது காத்திருக்க சொன்ன விஜய்யின் உதவியாளர்களை நெப்போலியன் திட்ட, கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த பலரது முன்னிலையிலேயே தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனாலேயே நெப்போலியனுடனான நட்பு கசப்பாகியுள்ளது. இதை மனதில் வைத்தே, ஒரு Ex அரசியல்வாதியாக நெப்போலியன், விஜய்யை விமர்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 30, 2025

கவின் ஆணவக்கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

image

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவக்கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையை CBCID தாக்கல் செய்துள்ளது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை, 32 ஆவணங்கள், 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 3-வது முறையாக ஜாமின் கோரிய SI சரவணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!