News October 29, 2025

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் அக்.31ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளதாகவும், இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News October 30, 2025

பார்வையற்ற மாற்று திறனாளிக்கு இசைக்கருவி வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் கண் பார்வையற்ற மாற்று திறனாளி ஒருவர் தனக்கு இசை கருவி வேண்டுமென கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று (அக்.30) மாவட்ட ஆட்சியர் சமூக (CSR) பங்களிப்பு நிதியில் இருந்து கொள்முதல் செய்த ரூ. 62000/- மதிப்பிலான இசைக்கருவியை ஆட்சியர் சிவசாவுந்திரவள்ளி அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.

News October 30, 2025

ஜோலார்பேட்டை: தலை துண்டாகி வாலிபர் பலி

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 1 வது பிளாட்பாரம் அருகே சரக்கு ரயில் செல்லும் வழியில் இன்று (அக்.30) காலை 8 மணி அளவில் சரக்கு ரயில் முன் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 30, 2025

திருப்பத்தூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!