News October 29, 2025
விழுப்புரம்: பெண்களுக்கு ஆபீஸில் பிரச்னையா? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., உங்களுக்கு அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ, பாலியல் சீண்டல், அணுகுதல், வன்முறை, பின் தொடர்தல் போன்ற எவ்வித பிரச்னைகளை சந்தித்தாலும் உடனே 181 எனும் கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். உங்களுக்கான உடனடி உதவி கிடைக்கும். மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டங்களை தெரிந்துகொள்ளவும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 30, 2025
வளத்தி:பைனான்சியர் கடத்தல் வழக்கு: இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சிவா என்பவர் நேற்று அக்.28 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்ட வழக்கில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, வைரமுத்து ஆகிய இருவரை விழுப்புரம் மாவட்ட போலீசார் இன்று அக்.29 (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
News October 29, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
விழுப்புரம் காவல்துறை அதிரடி சோதனை!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் கடந்த 10 நாட்களில் 1841 புதுச்சேரி மது பாட்டில்கள், 285 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்29) தெரிவிக்கப்பட்டுள்ளது.


