News October 29, 2025
விஜய்யுடன் இணைந்து களமிறங்குகிறார்

அரசியல் களத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை SAC களமிறங்குகிறார். அதற்கான முன்னெடுப்பாகவே, N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தவெக நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த மூவரும், விஜய்யின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவாளர்கள். கருணாநிதி, MGR, ஜெயலலிதா என 3 முதல்வர்களுடன் SAC பயணம் செய்துள்ளார். இது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News October 30, 2025
கலிலியோ பொன்மொழிகள்

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.
News October 30, 2025
ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.
News October 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.


