News October 29, 2025

தாயிடம் ஆசி பெற்ற துணை ஜனாதிபதி

image

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது இல்லத்திற்கு சென்ற அவர் தனது தாய் ஜானகி அம்மாளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மகிழ்ச்சியுடன் விபூதியை நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News October 30, 2025

திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண் 439-ல் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவரங்களுக்கு 94990-55944 அழைக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 30, 2025

திருப்பூரில் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி!

image

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் பொருளாளரும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் வருகிற 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்ட அளவில் ஜூனியர் பிரிவு மாணவர்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட கபடிக் கழக அலுவலக மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

News October 29, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, காங்கேயம் ஆகிய பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையை தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.

error: Content is protected !!