News October 29, 2025
மின்சார பஸ்களால் அரசுக்கு நஷ்டமா? அமைச்சர் விளக்கம்

மின்சார பஸ்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கியதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மின்சார பஸ்ஸின் விலை அதிகம் என்பதால் தனியார் மூலம் கொள்முதல் செய்ததாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை என்ற புரிதல் இல்லாமல் அதிமுக பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News October 30, 2025
மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
News October 30, 2025
PCB-யிடம் முரண்டு பிடிக்கும் ரிஸ்வான்

ODI கேப்டன் பொறுப்பிலிருந்த நீக்கப்பட்ட பாக்., வீரர் முகமது ரிஸ்வான், தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், பாக்., கிரிக்கெட் வாரியத்தின் (PCB) மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரிஸ்வான் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் & டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை PCB-யிடம் அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


