News October 29, 2025

சென்னையில் இன்று 116 சிறப்பு மருத்துவ முகாம்கள்

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று (அக் 29) மண்டல வாரியாக திருவொற்றியூர்-3, மணலி-3, மாதாவரம்-3, தண்டையார்பேட்டை-4, இராயபுரம் – 3, திரு.வி.க. நகர் – 9, அம்பத்தூர் – 10, அண்ணாநகர் – 21, தேனாம்பேட்டை – 3, கோடம்பாக்கம் – 9, வளசரவாக்கம் – 3, ஆலந்தூர் – 12, அடையார் – 13, பெருங்குடி – 11, சோழிங்கநல்லூர் – 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News October 30, 2025

சென்னை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று நவ.16 குள் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறையில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

விருகம்பாக்கத்தில் பாலியல் தொழில்; 3 பெண்கள் மீட்பு

image

விருகம்பாக்கம் தாராசந்த் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடக்கிறது என்ற ரகசிய தகவலின் பேரில், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் குழுவினர் நேற்று நடத்திய சோதனையில் நரேஷ்குமார் (41), என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். நரேஷ்குமார் இன்று சிறையில் அடைத்தனர்.

News October 30, 2025

சென்னை: பெண் தோழியிடம் பேசியவர் வெட்டிக் கொலை

image

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ், அசோக் நகர் காவல் நிலையம் அருகே தனது தோழியுடன் நேற்று காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!