News October 29, 2025
BREAKING: நாமக்கல் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

நாமக்கல்:குமாரப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 29) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 30) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 30, 2025
நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சியில் அமைந்த அரசு மருத்துவமனை வளாகம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை 68 படுகை வசதிகள் கொண்ட புதிய சித்த மருத்துவமனையாக மாற்றும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய சித்த மருத்துவமனையின் திறப்பு விழா வருகின்ற நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
News October 30, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.29 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


