News October 29, 2025
திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரித்தனர். சந்தேகமான தகவல்கள் வந்தால் 1930 எண்ணிற்கு அளிக்கவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.
Similar News
News October 29, 2025
திண்டுக்கல்: நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (30.10.2025) நடைபெறுகிறது. மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் குத்துக்காடு பொது மைதானம், நத்தம் தொகுதியில் குட்டுப்பட்டி மந்தை திடல், தொப்பம்பட்டி வட்டாரத்தில் மேல்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் தொகுதியில் சீலைக்காரி அம்மன் மண்டபம்
News October 29, 2025
திண்டுக்கல்: மதுபான கடைகள் தற்காலிகமாக மூடல்!

இராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட எல்லையோரம் உள்ள கொடைரோடு, பள்ளப்பட்டி, கிருஷ்ணாபுரம், விளாம்பட்டி, அணைப்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, விருவீடு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் கூடங்கள் இன்று மாலை 6 மணி முதல் நாளை முழுவதும் மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு.
News October 29, 2025
திண்டுக்கல் வீட்டில் நுழைந்த உடும்பு!

திண்டுக்கல் மா, 23வது வார்டு ஆர்,வி.நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் மதுரை வீரன் கோவில் எதிரே உள்ள வீட்டில் (அக்.29) இன்று காலை உடம்பு ஒன்று நுழைந்தது. இதைக் கண்ட குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடும்பை உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


