News October 29, 2025
அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.
Similar News
News October 29, 2025
பெண் ஜிகாதிகளை உருவாக்கும் JeM

பாக்.,ஐ தளமாகக் கொண்டு செயல்படும் JeM பயங்கரவாத அமைப்பு, அதன் மகளிர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக பயங்கரவாதிகளின் குடும்பபெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வீராங்கணைகளுக்கு பதிலடி கொடுக்க, இந்த பெண் ஜிகாதிகள் உருவாக்கப்படுகின்றனர். JeM-ல் சேரும் பெண்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வர் என அதன் தலைவர் மசூத் அசார் கூறும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
News October 29, 2025
ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார்: ராகுல்

ஓட்டுக்காக PM மோடி எந்த நாடகத்தையும் நடத்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்குக்காக PM டான்ஸ் கூட ஆடுவார் எனவும், நிதிஷ்குமார் எனும் ரிமோட் கண்ட்ரோலை வைத்து பாஜக பிஹாரை ஆள்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 29, 2025
சூரியன் மறைந்த பின் இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


