News October 29, 2025

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நாளை (30.10.2025) ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 29, 2025

இராமநாதபுரம்: போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

image

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் உ.முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜை விழா,118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், சருகனி, சிவகங்கை வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும். *ஷேர் பண்ணுங்க

News October 29, 2025

இராம்நாடு: போஸ்ட் ஆபீஸ் வேலை; இன்றே கடைசி நாள்!

image

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> CLICK <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்றே 29.10.2025 கடைசி ஆகும். மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

பசும்பொன்: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் கலைவாணி என்பவர் நேற்று பணி முடித்து கமுதி அரசு பள்ளியில் தங்கி இருக்கும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிகிறது. அவரது உடல் கமுதி மருத்துவமனையில் உள்ளது.

error: Content is protected !!