News October 29, 2025

உருமாண்டம் பாளையம்: ரயில் மோதி மாணவர் பலி

image

துடியலூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அகிலன் (18) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்றிரவு கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க உருமாண்டம் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 29, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

கோவையிலிருந்து புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்!

image

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் திருப்பூரில் இன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

கோவை: பட்டம் படித்தால் ரூ.65,000 சம்பளம்!

image

கோவை மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 31.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!