News October 29, 2025
இரவு ரோந்து பணியில் பல்வேறு காவல் அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை காவல்துறை ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் சுன்னியப்பன், தயாளன், தமிழ்செல்வன், முத்துசெல்வன் ஆகியோர் தலைமையில் ரோந்து மேற்கொள்கின்றனர். அவசர உதவி: 100 / 8939754100.
Similar News
News October 29, 2025
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.30) மதியம் 01.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார்.
News October 29, 2025
வேலூர் எஸ்பி தலைமையில் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக்.29) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News October 29, 2025
கட்சியின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம், இன்று (அக்.29) வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


