News October 29, 2025

அரசு பஸ் டிரைவர் ஆற்று கால்வாயில் மூழ்கி பலி

image

கீழ்வெண்பாக்கம் கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரவி 56 அரசு பஸ் டிரைவர் இவர் இன்று அக்.28ஆம் தேதி அங்குள்ள ஆற்றுக்கால்வாயில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது கால்வாயில் தவறி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 29, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News October 29, 2025

கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பேருந்து இன்று அக்.29ஆம் தேதி சென்று கொண்டிருந்தது பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 29, 2025

ராணிப்பேட்டை: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!