News October 28, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 29, 2025
ஈரோடு: G Pay / PhonePe இருக்கா?

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 29, 2025
சிறுமியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞர் கைது

நம்பியூர் அடுத்த பெரியபீளமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (28). அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 1 வருடமாக காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு மதுபோதையில் சென்று தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். அவது பெற்றோர் அளித்த புகாரின்படி விக்னேஷை கைது செய்தனர்.
News October 29, 2025
ஈரோடு மாவட்டத்தில் மின்தடையா? CALL பண்ணுங்க

ஈரோடு மாவட்டத்தில் பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்கம்பி அறுந்தால் (அ) மின்தடை, மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் அல்லது மின் சம்பந்தமாக வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு – 94987 94987 அல்லது வாட்ஸ்-ஆப் எண் 94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.


