News October 28, 2025
பருவமழைக்கு மாநகராட்சியில் 60 கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் கண்காணிக்க 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
சேலம்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
சேலத்தில் இலவச தையல் பயிற்சி!

சேலம் மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 9:30 முதல் மாலை 4:30 மணி வரை என45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சிட்ரா விசைத் தறி பணி மையம் அல்லது 0427 -2219486, 98438 85587 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.SHAREit
News October 29, 2025
நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலத்தில் அக்டோபர் 30 நாளை முகாம் நடைபெறும் இடங்கள் 1)துட்டம்பட்டி வெள்ளையன் மஹால் 2) இடைப்பாடி எஸ்.ஆர்.எம் தனலட்சுமி திருமண மண்டபம் ஆலச்சம்பாளையம் 3)ஏத்தாப்பூர் வாரச்சந்தை 4) நங்கவள்ளி எஸ்.ஆர்.கே திருமண மண்டபம் மாமரத்து மேடு 5)அயோத்தியாபட்டணம் கிராம செயலகம் எம்.தாதனூர் 6)ஆத்தூர் எஸ்ஆர்டி மில் வளாகம் மஞ்சினி


