News October 28, 2025

2 மாநிலங்களில் வாக்குரிமை: PK-வை சுற்றும் சர்ச்சை

image

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளார். இச்சூழலில், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க ECI உத்தரவிட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

விலை ₹4,000 வரை உயருகிறது

image

மெமரி ‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5%-10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏஎன்டி பிளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடுசெய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

News October 29, 2025

₹44,900 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

புலனாய்வு துறையில் உள்ள 258 கிரேடு 2 தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

களத்திற்கு செல்லாத ராகுல்.. அச்சம் என விளாசும் NDA!

image

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தலை வைத்து கொண்டு ராகுல், பிரசார களத்திற்கு செல்லாதது காங்கிரஸ் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக, ஜேடியூ தலைவர்கள், ராகுல் காந்தி அச்சத்தில் ஓடி ஒளிந்து கொண்டதாக சாடி வருகின்றனர். ஏற்கெனவே கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் RJD, காங்கிரஸ் 10 தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதால் கூட்டணியின் ஒற்றுமையின்மை என பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!