News October 28, 2025
இன்று இரவு இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தீவிரமடைந்துள்ள மொன்தா புயல் இன்றிரவு ஆந்திராவின் பாலகொல்லு அருகே கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இரவு 9 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்றும், இரவு 11 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள்!
Similar News
News October 29, 2025
தமிழக அரசில் 1,429 காலியிடங்கள்.. ₹71,000 சம்பளம்!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 1,429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழும், 12-ம் வகுப்பில் Science குரூப்பும் படித்திருக்க வேண்டும் ➤Health Inspector/ Sanitary Inspector சர்டிபிகேட் இருக்கணும். சம்பளம்: ₹19,500- ₹71,900 வரை. நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 29, 2025
BREAKING: விஜய் கட்சியை முடக்க முயற்சி

கரூருக்கு விஜய் தாமதமாக செல்ல காவல்துறையே காரணம் என தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். போக்குவரத்தை போலீசார் சரியாக சீர் செய்து கொடுத்திருந்தால், விஜய் சரியான நேரத்தில் கரூர் சென்றிருப்பார் எனவும் கூறியுள்ளார். அதேபோல், தவெகவை முடக்க முயற்சி நடப்பதாகவும், எந்த வித நெருக்கடியையும் எதிர்கொள்ள தவெக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
இந்தியாவின் கைப்பாவையாக ஆப்கன் உள்ளது: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் , இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் துண்டுதலின் பேரில், ஆப்கானிஸ்தான் செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஆப்கானால் தாங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.


