News October 28, 2025
சென்னையில் 4.66 லட்சம் பேருக்கு உணவு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அக். 22 முதல் இன்று (அக்.28) காலை வரை மொத்தம் 4,66,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க 215 நிவாரண முகாம்களும், அவர்களுக்கு உணவு தயாரிக்க 111 சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News October 29, 2025
சென்னை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (அக்.28) காலை முதல் இன்று காலை மணி வரை மழை பெய்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதனால் அயனாவரம்-11, எழும்பூர் – 8.9, கிண்டி – 6.6, மாம்பலம்-9.2, மயிலாப்பூர்-8.6, பெரம்பூர் – 13.3, புரசைவாக்கம் – 8.4, தண்டையார்பேட்டை-12.2, ஆலந்தூர் – 8.8, அம்பத்தூர் – 9, சோழிங்கநல்லூர் – 9.6 என மழை மில்லி மீட்டரில் பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News October 29, 2025
சென்னை: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

சென்னை மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <


