News April 18, 2024
359 இடங்கள் பதற்றமானவை

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக மதுரை மாவட்டத்தில் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 359 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இம்மையங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு, தேர்தல் நுண் பார்வையாளர்கள், வெப் காஸ்டிங் முறை ஆகியவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க இலவச பயிற்சி APPLY NOW

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆண்கள் ,பெண்கள், திருநங்கைகள் பயன்பெறும் வகையில் புகைப்படம், வீடியோகிராபிக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.மதுரை ரூட் செட்டில் வரும் 16ம் தேதி முதல் 30 நாட்களுக்கு நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். முன்பதிவு செய்ய:94456-00561, 99446-51567. புகைப்பட கலைஞராக நினைபோருக்கு SHARE செய்யுங்க.
News July 5, 2025
மதுரையில் 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

மதுரையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பேருந்தில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஆட்சியரிடம் அவரது தாய் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
News May 8, 2025
மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.