News April 18, 2024
நயினார் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில், நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
News January 21, 2026
கூட்டணி இருக்கா? காங்கிரஸ் பதிலால் திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் காங்., நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்., தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.
News January 21, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.


