News October 28, 2025
மக்கள் நாயகன் காலமானார்

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அன்போடு அழைக்கப்பட்ட பிரபல டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன்(65) உடல் நலக்குறைவால் காலமானார். ராஜபாளையம் டவுனில் கிளினிக் வைத்திருந்த இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களிடம் ₹10, ₹20, அதிகபட்சமாக ₹50 மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு சிகிச்சை பார்த்தவர். கொரோனா காலத்தில் பல உயிர்களை காத்த இவருக்கு பல்வேறு தனியார் அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
Similar News
News October 29, 2025
INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.
News October 29, 2025
பாடும் பறவைகள்

தாளமிடும் இசையின் ஓசையாக ஒளிக்கும் பறவைகளின் கூக்குரல், நமது காதுகளில் கரைந்தோடும் தேனிசை. இயற்கையின் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஆம் பறவைகள் உண்மையிலேயே பாடுகின்றன. பாடும் பறவைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இதேபோன்று நீங்கள் ரசித்த பாடும் பறவையின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
Sports Roundup: ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்

*ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல். *புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் 46-39 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேற்றம். *ஆசிய யூத் கேம்ஸ் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில், ஆனந்த் தேஷ்முக் வெண்கலம் வென்றார். *அதே போல TT கலப்பு இரட்டையரில் சிண்ட்ரெல்லா தாஸ், சர்தக் ஆர்யா இணைக்கு வெண்கலம் கிடைத்தது.


