News April 18, 2024
விழுப்புரம்: வீட்டில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35), ஓட்டல் ஊழியர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுதால் , இவர் புதுச்சேரி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீசார் நேற்று இரவு அவர் வீட்டுக்குச் சென்று 400 மதுபாட்டில்கள், 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 5, 2025
திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற சென்ற சிறுமி கோமதி (17) அவருக்கு கையின் எலும்பு வளர்ச்சி குன்றி இருந்தது. அதனை அறுவை சிகிச்சை செய்து 140 நாட்களில் 14 செ.மீ வளர செய்து திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
News July 5, 2025
விழுப்புரம் நகரில் விளம்பர பதாகை வைக்க கட்டுப்பாடு

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <