News April 18, 2024
கிருஷ்ணகிரி: 3 முறை மகுடம் சூடிய வாழப்பாடி ராமமூர்த்தி!

கிருஷ்ணகிரி தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஒரு வித்தியாசமான மக்களவைத் தொகுதி. இங்கு 1980, 1984, 1991 என ஹாட்ரிக் வெற்றிபெற்று மக்கள் தலைவனாக வலம்வந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி (காங்.). 1991 நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, காவிரி பிரச்சனையால் கலவரம் வெடித்தது. தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாத வாழப்பாடி தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார்.
Similar News
News April 19, 2025
அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News April 19, 2025
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.