News October 28, 2025
FLASH: 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘மொன்தா’ புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. எண்ணூரில் தொடர்மழை பெய்து வருவதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். புயல் இன்று மாலை கரையை நெருங்கும் போது மணிக்கு 90 – 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.
Similar News
News October 29, 2025
ராசி பலன்கள் (29.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 29, 2025
பாஜகவுக்கு ஆதரவாக EC செயல்படுகிறது: ஜோதிமணி

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆனால் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் பாஜகவின் துரோகத்திற்கு அதிமுக துணை போக கூடாது என்றும் வலியுறுத்திள்ளார்.
News October 29, 2025
தகதகவென மின்னும் மாளவிகா

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக இன்ஸ்டாவில், போட்டோஸை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், மாளவிகா, பொன்னொளியில் மலர்ந்த முகத்துடன், உயிர் பெற்ற ஓவியமாக, பிரகாசமாக ஒளிர்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.


