News October 28, 2025

“அரசை நம்பியிருந்தால் சிரமம்”-முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நேற்று புதிய மின்சாரப் பேருந்தை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசும்பொழுது, “அரசை மட்டும் நம்பியிருந்தால் சிரமம். பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில், அதில் பணியாற்றுவோர் செயல்பட வேண்டும். விரைவில் பி.ஆர்.டி.சி மூலமும் பஸ்கள் வாங்கவுள்ளோம். அதன்படி மொத்தம் 100 பஸ்களுக்கு மேல் வரும்.” என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

புதுச்சேரி: கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

image

கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் வளாகத்தில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் தட்டாஞ்சாவடி இசக்கி (22) என்பதும், அவர் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

News October 28, 2025

காரைக்கால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்குவதாகவும், அதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, மனைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமாக உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்காதவாறு தங்களது சொந்த முயற்சியில் சுத்தமாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News October 28, 2025

புதுச்சேரி: சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

image

புதுச்சேரி மாநிலத்தில் தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்ததாக விசாரணை நடத்தியதில், அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது. இதில் சுகாதாரத்துறை முன்னாள் உயர் அதிகாரிகள் கைது, முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார் மற்றும் துணை இயக்குநர் அல்லி ராணி ஆகிய மூவரையும் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஓழிப்பு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!