News October 28, 2025
வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த USA

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
EPS தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், EPS தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும் நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 28, 2025
உணவு வீணடிக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடம்?

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின்படி, உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படும் நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ஆண்டுக்கு எந்தெந்த நாடுகளில், எவ்வளவு உணவுகள் வீணாகிறது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உணவு வீணாவதை தவிர்க்க என்ன செய்யலாம்? உங்கள் ஐடியாவை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
ஜே.பி.நட்டாவுக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


