News October 28, 2025
கடலூர்: நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.29) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் வட்டம், ராஜேந்திரப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்என்எஸ் மகால், கடலூர் அடுத்த காரணப்பட்டு கிராம ஊராட்சி கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் கவுரவ நிதிஉதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 17,374 பேர் தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். நவம்பர் 2025ம் மாத தொடக்கத்தில், 21-வது தவணை பெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள அட்டைப் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
கடல் மூழ்கி பெண் மாயம்; போலீசார் விசாரணை

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெண் ஒருவர் தனது காலனி மற்றும் கைப்பையை கரையில் வைத்துவிட்டு, திடீரென்று கடலில் இறங்கினார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய அந்தப் பெண் மீண்டும் கரைக்கு வரவில்லை. அதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 28, 2025
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1ஆம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியஎ சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதில், ஊராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


