News April 18, 2024
மயிலாடுதுறை அருகே தயார் நிலையில் அதிகாரிகள்

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சனா வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் திறக்கப்பட்டு 288 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் வாகனங்களுடன் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டுள்ளனர்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
News October 18, 2025
மயிலாடுதுறை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News October 18, 2025
மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

செம்பனார்கோயில், சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன் மகன் நவீன் குமார் (18). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை இஸ்திரி செய்தபோது இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.