News October 28, 2025
அரியலூர்: இரண்டு நாட்களில் 99 வழக்குகள்!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 38 வழக்குகள், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 49 வழக்குகள், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக 12 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
News October 28, 2025
அரியலூர்: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


