News October 28, 2025
சேலத்தில் 1.18 லட்சம் நூதன முறையில் மோசடி!

சேலம் கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் கடந்த 2ஆம் தேதி அழகாபுரம் இந்தியன் ஏடிஎம் வங்கியில் 2000 எடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் அவரின் ரகசிய எண்ணை பார்த்து அவரின் ஏடிஎம் அட்டையும் நூதன முறையில் மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவரது அக்கவுண்டில் இருந்து 1.18 லட்சம் மாயமானது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் விசாரணை!
Similar News
News October 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 28, 2025
பருவமழைக்கு மாநகராட்சியில் 60 கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் கண்காணிக்க 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
சேலம்: மாமன்ற இயல்பு கூட்டம் – ஆணையாளர் அறிவிப்பு!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கோட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


