News October 28, 2025
குமரி: நாற்காலியில் சிக்கிய 1¼ வயது குழந்தை

குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குழித்தோடு பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரது 1¼ வயது மகன் கேசங்கின் கால், பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள், நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
Similar News
News October 29, 2025
சுசீந்திரத்திற்கு வருகை தரும் ஆளுநர்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அக்.30. அன்று சாமி தரிசனம் செய்கிறார். இன்று (அக்.29) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு அக்.30 அன்று காலை 8.20 மணி முதல் 8.40 மணி வரை சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
News October 29, 2025
விவசாயிகள் அடையாள எண் பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இதுவரை தங்களது நில உடமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் பெற்றிட வேண்டும். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி உடன் நிறைவடைவதால் விடுபட்ட விவசாயிகள் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து அடையாள என் பெற வேண்டும்.
News October 28, 2025
குமரி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

குமரி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….


