News October 28, 2025
மொன்தா புயல்: வார் ரூமில் உதயநிதி ஆய்வு

மொன்தா புயல் எதிரொலியாக சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மழைநீர் அப்புறப்படுத்துதல், மின்சார பிரச்னை உள்ளிட்டவைகளை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து DCM உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
Similar News
News November 10, 2025
அப்பாவி மக்கள் பலியானது வேதனை அளிக்கிறது: CM

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News November 10, 2025
மறக்குமா நெஞ்சம்.. கலக்கிய போன்கள்

ப்ரோ நீங்க இந்த மொபைல்லாம் யூஸ் பண்ணியிருக்கீங்களா? ஸ்மார்ட்போனுக்கு முன்பு இந்த போன்கள் தான் கெத்தா, மாஸா இருந்துச்சு. 2000-களில் வெளிவந்த இந்த கிளாஸிக் போன்களுக்கு இப்பவும் நல்ல வரவேற்பு இருக்கு. ஏராளமான டிசைன்ஸ், புதுபுது ஆப்ஷன்ஸ் என மிரட்டிய போன்களை, மேலே போட்டோஸாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த போன் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 10, 2025
பிரபல நடிகை வீட்டில் பதற்றம்… போலீஸ் குவிந்தது

<<18247000>>நடிகை த்ரிஷா<<>> வீட்டை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இ-மெயில் மூலம் போலீஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சச்சு வீட்டில் குவிந்த போலீஸார், மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.


