News October 28, 2025

நாகையில் இப்படி ஒரு இடமா!

image

ராமர் இலங்கை நோக்கி செல்வதற்கு முதலில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வழியை தேர்ந்தெடுத்ததால் இது ஆதிசேது எனப்படுகிறது. கோடியக்கரையில் ஒரு மணல் திட்டின் மீது ஏறி நின்று பார்க்கையில் இலங்கையின் பின்புற கோட்டை மட்டுமே தெரிந்துள்ளது. பின்புறமாக செல்வது தவறு என எண்ணி ராமேஸ்வரம் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அவர் நின்ற இடத்தில் விஜயநகர மன்னர்கள் 1480-ம் ஆண்டு ராமர் பாத கோயிலை கட்டினர். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 28, 2025

நாகை: 16,915 விவசாயிகளிடம் நெல் கொள்முதல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 16,915 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 197.78 கோடித் தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் நடைபெறும் கொள்முதல் பணிகள் தங்கு தடை இன்றி விரைவாக நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

நாகை: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நாகை: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

image

வேளாங்கண்ணி கடலில் குளிக்கும் போது நேற்று மாயமான பெங்களூர் இளைஞர் பாஹாபா உடல் இன்று செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது. நேற்று நண்பர்களுடன் கடலில் குளித்த 7 பேரில், அலையில் சிக்கிய மூவரில் அருண், முனுஷ் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான பாஹாபா இன்று உயிரிழந்த நிலையில் செருதூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!