News October 28, 2025
புதுச்சேரி: அதிவிரைவு ரயில் ரத்து

மோன்தா புயல் காரணமாக புவனேஸ்வரில் இருந்து இன்று (அக்.28) புதுச்சேரிக்கு புறப்பட்டு வரும் அதிவிரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை (அக்.29) மாலை 6:50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வருக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News October 28, 2025
காரைக்கால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்குவதாகவும், அதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, மனைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமாக உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்காதவாறு தங்களது சொந்த முயற்சியில் சுத்தமாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 28, 2025
புதுச்சேரி: சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

புதுச்சேரி மாநிலத்தில் தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்ததாக விசாரணை நடத்தியதில், அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது. இதில் சுகாதாரத்துறை முன்னாள் உயர் அதிகாரிகள் கைது, முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார் மற்றும் துணை இயக்குநர் அல்லி ராணி ஆகிய மூவரையும் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஓழிப்பு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 28, 2025
புதுவை: வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்து பண மோசடி

புதுவை பாகூரை சேர்ந்த பெண்ணின் வாட்ஸ்அப்-ஐ மர்ம நபர்கள் ஹேக் செய்து அப்பெண் பேசுவது போல் பேசி பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்துள்ளனர். மேலும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஒருவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி அவரிடமிருந்து ரூ.20,000 பெற்று ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.


