News October 28, 2025
BREAKING: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மொன்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதால், கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.
Similar News
News November 5, 2025
அட்லீ vs லோகி vs நெல்சன்.. யார் கரெக்ட் சாய்ஸ்?

தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவின் அடுத்த மெகா ப்ராஜெக்ட் என்றால் அது ரஜினி- கமல் இணையும் படம்தான். ‘விக்ரம்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கம்பேக் கொடுத்த லோகேஷை கொண்டுவர கமல் முயற்சித்தாலும், ரஜினியின் சாய்ஸ் லோகேஷ் இல்லை. நெல்சன் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரஜினியின் தேர்வாக அட்லீ மாறியிருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்லீ, லோகேஷ், நெல்சன்- மூவரில் யார் பெஸ்ட் சாய்ஸ்?
News November 5, 2025
கையெடுத்து கும்பிட்டு, Fine போட்ட போலீஸ்!

உ.பி.யில் பின்னால் 4 பேர், முன்னால் 2 பேர் என 6 பசங்களுடன் பைக்கில் வந்தவரை பார்த்து போலீசும் ஒரு கணம் அரண்டு போயினர். அவரை மடக்கிய போலீசார், அபராதம் போடுவதற்கு முன், கையெடுத்து கும்பிட்டனர். பல்வேறு விதிமீறலுக்காக அவருக்கு ₹7,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக, நெட்டிசன்களும் அவர் செயலால் வாயடைந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?
News November 5, 2025
நாள் முழுக்க கம்ப்யூட்டர், ஃபோன் பார்க்குறீங்களா?

உங்கள் கண்கள் பாதிக்கப்படலாம் என தெரிந்தும் வேலைக்கு போனால் கம்ப்யூட்டர், வீட்டுக்கு வந்தால் ரீல்ஸ் என தினமும் அந்த Screen-ஐ பார்த்துட்டே இருக்கீங்களா? கண்களுக்கு பாதிப்பு வராமல் காக்க சில டிப்ஸ் இருக்கு. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்காவது பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்டுங்க. Screen Time-ஐயும் குறைத்துகொள்வது நல்லது. SHARE THIS.


