News October 28, 2025
RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 28, 2025
ஓராண்டுக்கான Subscription இலவசம்.. HAPPY NEWS!

₹399 மதிப்புள்ள ChatGPT Go மாதாந்தர சப்ஸ்கிரிப்ஷனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்போவதாக Open Al நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 4 முதல் புதிதாக Sign Up செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன்மூலம், AI image generation போன்ற பிரத்யேக சேவைகளை தடையில்லாமல் பெறலாம். பயனர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு ஆஃபரை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. SHARE.
News October 28, 2025
பாஜகவால் தப்பிக்கிறார் விஜய்: சீமான் குற்றச்சாட்டு

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News October 28, 2025
BREAKING: விஜய் வெளியிட்டார்

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்கட்சிகள், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதனிடையே, <<18127990>>வெற்று விளம்பரத்திற்காக<<>> நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் பெருமை பேசி வருவதாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்கு பிறகு தவெகவினர் மீண்டும் SM-ல் ஆக்டீவாக தொடங்கியுள்ளனர்.


