News October 28, 2025

குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் நேற்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Similar News

News October 28, 2025

நாகை: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

image

வேளாங்கண்ணி கடலில் குளிக்கும் போது நேற்று மாயமான பெங்களூர் இளைஞர் பாஹாபா உடல் இன்று செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது. நேற்று நண்பர்களுடன் கடலில் குளித்த 7 பேரில், அலையில் சிக்கிய மூவரில் அருண், முனுஷ் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான பாஹாபா இன்று உயிரிழந்த நிலையில் செருதூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நாகை மக்களே.. இனி எளிதாக வானிலை தகவல் அறியலாம்!

image

நாகையில் வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!