News October 27, 2025
அரசு வங்கிகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க திட்டம்?

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
ஜனநாயகன்: ஒரே வார்த்தையில் முடித்த பிரியாமணி

விஜய்யின் கடைசி படமாக ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. H வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரைன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனநாயகனில் விஜய் உடனான காட்சிகள் பற்றி பிரியாமணியிடம் கேட்டதற்கு, ‘படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்’ என பதிலளித்துள்ளார். ஜனநாயகன் மாபெரும் வெற்றியாக அமையுமா?
News October 28, 2025
தமிழகத்தில் 98% செயல்பாட்டில் அரசு பள்ளி கழிவறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேச பள்ளிகளில் 100% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சமாக, அருணாசல பிரதேசத்தில் 74.4% கழிவறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன.
News October 28, 2025
பெர்னாட்ஷா பொன்மொழிகள்

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
*இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. *பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.


