News October 27, 2025
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ₹1,000.. நாளை விண்ணப்பம்

அனைத்து கிராமப்புற பள்ளிகளுக்கும் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நவ.9-ல் நடைபெறவுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை நாளை முதல் டவுன்லோடு செய்யலாம். இதில், மாவட்டத்திற்கு 100 பேர் (50 மாணவர்கள், 50 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு ஆண்டிற்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ.4 கடைசி தேதி. SHARE IT.
Similar News
News October 28, 2025
தமிழகத்தில் 98% செயல்பாட்டில் அரசு பள்ளி கழிவறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேச பள்ளிகளில் 100% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சமாக, அருணாசல பிரதேசத்தில் 74.4% கழிவறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன.
News October 28, 2025
பெர்னாட்ஷா பொன்மொழிகள்

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
*இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. *பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
News October 28, 2025
ICU-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின் போது, ஸ்ரேயஸ் ஐயருக்கு விலா எலும்பில் அடிபட்டது. அவருக்கு ICU-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், அவர் ICU-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறியுள்ளதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்.30 வரை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனிடையே, அவரது பெற்றோர் சிட்னிக்கு புறப்பட்டுள்ளனர்.


