News October 27, 2025
புயல் அலர்ட்: 21 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், கவனம் மக்களே..!
Similar News
News October 28, 2025
கடவுள்கிட்ட பேசுனீங்களா? சந்நியாசிகளிடம் கேட்ட ரஜினி

நீங்கள் கடவுளை பார்த்துள்ளீர்கள், அவர் எப்படி இருப்பார்? கடவுளிடம் நீங்க பேசியிருக்கிறீர்களா என்று சந்நியாசிகளிடம் ரஜினிகாந்த் கேட்பார் என்று அவரது நண்பர் ஸ்ரீஹரி கூறியுள்ளார். எப்போதும் இமயமலை, ரிஷிகேஷ் சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவதை ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்திலும் அவர் ரிஷிகேஷ் சென்றார். இந்த பயணத்தின் போது ரஜினி ரோட்டு கடையில் கூட சாப்பிடுவார் என்றும் ஹரி தெரிவித்தார்.
News October 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 502 ▶குறள்: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.▶பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
News October 28, 2025
Global Roundup: ஹமாஸ் மெம்பருக்கு இஸ்ரேல் அனுமதி

*உகாண்டாவில் இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய அந்நாட்டு அதிபர் முசேவேனி.
*ஆஸி., நியூசி., PM-களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு.
*வடகிழக்கு இந்திய பகுதிகள், பங்களாதேஷின் மேப்பில் இருந்ததற்கு அந்நாட்டு அரசு மறுப்பு.
*UK மன்னர் சார்லஸை திட்டியவரால் பரபரப்பு.
*இறந்த பணயக்கைதிகளை தேடும் பணிக்காக, ஹமாஸ் உறுப்பினருக்கு இஸ்ரேல் அனுமதி.


