News October 27, 2025
இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
Similar News
News October 27, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
ராசி பலன்கள் (28.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 27, 2025
SIR நடவடிக்கை: TN அரசியல் கட்சிகளுடன் EC ஆலோசனை

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.


