News October 27, 2025

புதுச்சேரி: தாய் கழுத்தை அறுத்த மகன்

image

புதுச்சேரி, பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி லோகநாயகி கணவர் இறந்து விட்டதால், அவரது மகன்கள் ராஜ்குமார், சந்தானம், ஆகியோருடன் வசித்து வந்தார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த மூத்த மகன் ராஜ்குமார், தாய் லோகநாயகியிடம் சொத்தை தனக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு லோகநாயகி மறுக்கவே தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்தனர்.

Similar News

News October 27, 2025

புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்

image

புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி பேருந்துகள், 15 ஏ.சி. இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை தொடக்க நிகழ்வு மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்றது. இந்த சேவையை, ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

News October 27, 2025

புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்

image

புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி பேருந்துகள், 15 ஏ.சி. இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை, இன்று மறைமலை அடிகள் சாலையில் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

News October 27, 2025

புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நேர்காணல்

image

கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியின் மார்பக புற்று நோயியல் துறை சார்பில், திட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 11 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 6 பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களின் விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாளை மறுநாள் (29.10.2025) புதன்கிழமை ஜிப்மர் வளாகத்தில் நேர்காணல் நடக்கிறது.

error: Content is protected !!