News October 27, 2025

ஈரோடு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News October 27, 2025

ஈரோடு: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா?

image

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக கவுந்தப்பாடி, தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், புங்கம்பள்ளி, சூரியம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், சிங்காநல்லூர், வேலம்பாளையம், அவல்பூந்துறை, பாசூர், தேசிபாளையம், புங்கம்பள்ளி சுங்கக்காரன்பாளையம், காந்திநகர், பச்சப்பாளி பெரியபுலியூர், மரப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News October 27, 2025

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட நிலவரம்;
இன்று அக்டோபர்-27 மதியம் 12 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.82 (33.46) அடியாகவும், பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 (105) அடியாகவும் உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாகவும்,
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.75 ஆகிய இரண்டு அணைகள் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.

News October 27, 2025

வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. தொடக்கத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்கலாம். பின்னர் தங்களது பகுதி வேளாண் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசலாம். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!